சீனாவினால் தயாரிக்கப்பட்ட மூக்கின் ஊடாக செலுத்தப்படும் கோவிட் தடுப்பு மருந்து
மூக்கின் ஊடாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை சீனாவிலுள்ள கேன்சினோ பயோலொஜிக்கல் நிறுவனம் தயாரித்துள்ளது. கோவிட் வைரஸை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தநிலையில், சீனா மூக்கின் ஊடாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கி இருக்கிறது. சீனாவில் உள்ள கேன்சினோ பயாலஜிக்கல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
இதுபற்றிய ஆய்வுகளை பல கட்டங்களாக நடத்தியது. அதில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் தயாரித்துள்ள சில தடுப்பூசிகள் சரியாக வேலை செய்யவில்லை.
கோவிட் வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் சீனா தயாரித்துள்ள இந்த மருந்து அவற்றையும் கட்டுப்படுத்தும் என்று கூறுகிறது.
அதுமட்டுமல்ல இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த மருந்துக்கும் இல்லாத அதிக சக்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தை செலுத்தினால் உடலில் 250இல் இருந்து 300 மடங்கு எதிர்ப்பு சக்தி உருவாகுவதாக கூறியுள்ளனர்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,