மட்டக்களப்பில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 145 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 23 பேருக்கும், களுவாஞ்சிக்குடியில் 19 பேருக்கும், வாழைச்சேனையில் 8 பேருக்கும், காத்தான்குடியில் 2 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 2 பேருக்கும், ஓட்டுமாவடியில் 8 பேருக்கும், செங்கலடியில் 14 பேருக்கும், ஏறாவூரில் 25 பேருக்கும், வெல்லாவெளியில் 17 பேருக்கும் , ஆரையம்பதியில் 10 பேருக்கும், கிரானில் 10 பேருக்கும், விமானப்படைவீரர் ஒருவர் உட்பட 145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது .எனவே
பொதுமக்கள் பயணைத்தடையை மீறி வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வரவேண்டாம்
என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
