அன்டிஜன் பரிசோதனைகளின் மூலம் 41 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வெளியேறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் மூலம் 41 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
எழுமாறான அடிப்படையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களிடம் பரிசோதனை நடாத்தப்படுகின்றது.
கடந்த 18ஆம் திகதி முதல் இதுவரையில் நடத்தப்பட்ட எழுமாறான பரிசோதனைகளில் 41 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நான்கு வெளியேறும் இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 24ஆம் திகதி முதல் சுமார் 17 வெளியேறும் இடங்களில் இந்த அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் பரிசோதனை நடத்த நடமாடும் பரிசோதனை குழுக்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.