ஐரோப்பா மீண்டும் கோவிட் தொற்றின் கேந்திரமாக மாறலாம் : உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பா மீண்டும் கோவிட் தொற்று நோயின் கேந்திர நிலையமாக மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் பயணக்கட்டுப்பாடுகள் துரிதமாக தளர்ப்பட்டுள்ளமை மற்றும் போதுமானளவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமை என்பன இதற்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையல், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் ஐரோப்பிய பிராந்தியத்தில் மேலும் 5 லட்சம் கோவிட் மரணங்கள் ஏற்படக் கூடும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
53 ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri