நாட்டிற்கு பேரழிவாக மாறும் - இலங்கையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நோயின் தீவிரம் குறைந்து விட்டதாக தெரியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோவிட் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் ஒவ்வாமைகள் சீராக அதிகரித்து வருவதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளாந்த மரண எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 50ஆக உயர்ந்துள்ளது. இது இந்த புதிய கோவிட் மாறுபாட்டின் ஆபத்தை நிரூபிக்கிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒட்சிசனைச் சார்ந்திருக்கும் விகிதம் 41% ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நோயின் தீவிரம் குறைந்து விட்டதாக தெரியவில்லை.
கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பானது, ஒட்சிசன் அதிகரிப்பதை சார்ந்து இருப்பதை புறக்கணிக்க முடியாது.
ஏனெனில் அது எதிர்காலத்தில் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கும். எனவே, பயணக் கட்டுப்பாடுகளை நீக்கப்பட்டாலும் அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கொலம்பகே பொது மக்களை எச்சரித்துள்ளார்.
பொது மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், இது நாட்டிற்கு பேரழிவாக மாறும் என்றும் கலாநிதி கொலம்பகே தெரிவித்துள்ளார்.