இலங்கையில் கோவிட் இறப்புக்களின் இன்று காலை வரையான நிலவரம் - வீடுகளிலும் 13 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இறப்பவர்களின் எண்ணிக்கை இன்று 1,742 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தகவல்படி , வைரஸுடன் தொடர்புடைய மேலும் 46 பேர் மரணமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த 46 இறப்புகளும் மே 17 முதல் ஜூன் 5 வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 15 இறப்புகள் ஜூன் 4 அன்று இடம்பெற்றுள்ளன.
இறந்தவர்களில் 23 பெண்கள் மற்றும் 23 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். பலியானவர்கள் வெலிகம, கின்னியா, வெயங்கோட, களுத்துறை, ஹட்டன், அக்மீமன, ஜின்டோட்ட, காலி, யக்கலமுல்ல, கொழும்பு - 14, கொழும்பு - 15, அகலவத்த, மீரிகம, பிடகோட்டே, ரத்கம, நாகொட, ஹிக்கடுவ, உடதலவின்ன,பொரெல்ல, நுவரெலியா, அவிசாவெல்ல, நிட்டாம்புவ, முருத்தலாவ, அக்குரனை, கல்லேலிய , கெலியோய , ஓபநாயக்க, வவுனியா, பம்பலபிட்டிய, கம்பஹா, நவுத்துடுவ, பசறை பிலிமத்தலாவ, குருதேனிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
அவர்களில் 13 பேர் தங்கள் வீடுகளிலும், 33 பேர் மருத்துவமனைகளிலும் மரணமாகியுள்ளனர்.
கோவிட் நிமோனியா, கோவிட் நுரையீரல் தொற்று, நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்களுடன் தொடர்புடைய COVID-19 தொற்றே இந்த இறப்புகளுக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.