இலங்கையில் நேற்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களில் அதிகமானோர் கண்டறியப்பட்ட மாவட்டம்
இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 2,386 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களில் கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 338 தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கண்டி நகரப் பகுதியிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் இரண்டாவது அதிக தொற்றாளிகள் மெனிக்கின்ன பகுதியிலிருந்து பதிவாகியுள்ளனர்.
கொழும்பில் 227 பேரும் , கம்பாஹாவில் 184 பேரும், களுத்துறையில் 321 பேரும் தொற்றாளிகளாக பதிவாகியுள்ளனர்.
நுவர எலியாவில் 228 என்ற எண்ணிக்கையில் கணிசமாக தொற்றாளிகள் அதிகரித்துள்ளனர்.
மேலும், மாத்தறையில் 104 தொற்றாளிகளும், குருநாகலில் 181
தொற்றாளிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்.