இலங்கையில் திங்கள் முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள மேலும் 42 பகுதிகள்
நாட்டில் நாளை மறு தினமான திங்கட் கிழமை முதல் 31ஆம் திகதி வரையான இரண்டு வார காலத்திற்கு தனிமைப்படுத்தலுக்கான நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேவேளை திங்கட்கிழமை முதல் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
நாட்டில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான பயணத்தடை எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,