நாட்டில் ஆறு வகையான கோவிட் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்
நாட்டில் ஆறு வகையான கோவிட் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆறு வகையிலான கோவிட் நுண்மித் தொற்று திரிபுகளினால் பாதிக்கப்பட்டோர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க திரிபுடைய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இந்திய திரிபினால் பாதிக்கபபட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு, குருணாகல், களுத்துறை, கண்டி, பொலனறுவை, மன்னார் போன்ற நகரங்களில் இந்த புதிய திரிபுடைய தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் இந்திய திரிபுடைய கொவிட் தொற்றாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.