இலங்கையில் ஒரு மாதத்திற்கு 600 பேர் இறக்கலாம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் கோவிட் தொற்று நோய் பரவி வருவதில் மாற்றம் ஏற்படுவதை காணமுடியவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் நிலைமையில் ஒரு மாதத்திற்கு சுமார் 600 நோயாளிகள் உயிரிழக்கலாம் என அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொழம்பகே கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைரஸ் பரவலை தடுக்க சுகாதார பிரிவின் தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியாது.
சுகாதார கொள்ளவு என்பது கட்டில்கள் மாத்திரம் அல்ல. தற்போதைய சந்தர்ப்பத்தில் 10 ஆயிரம் கட்டில்கள் தயாரிப்பதில் பிரயோசனம் இல்லை.
மருத்துவர்கள், தாதிகள், மருத்துவ உபகரணங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள் என்பன அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri