இலங்கையில் ஒரு மாதத்திற்கு 600 பேர் இறக்கலாம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் கோவிட் தொற்று நோய் பரவி வருவதில் மாற்றம் ஏற்படுவதை காணமுடியவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் நிலைமையில் ஒரு மாதத்திற்கு சுமார் 600 நோயாளிகள் உயிரிழக்கலாம் என அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொழம்பகே கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைரஸ் பரவலை தடுக்க சுகாதார பிரிவின் தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியாது.
சுகாதார கொள்ளவு என்பது கட்டில்கள் மாத்திரம் அல்ல. தற்போதைய சந்தர்ப்பத்தில் 10 ஆயிரம் கட்டில்கள் தயாரிப்பதில் பிரயோசனம் இல்லை.
மருத்துவர்கள், தாதிகள், மருத்துவ உபகரணங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள் என்பன அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
