கோவிட் தொற்று அதிகரிப்பு குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் - ஹேமந்த ஹேரத்
கோவிட் தொற்று அதிகரிப்பு குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கோவிட் தொற்றின் கீழ்நோக்கிய போக்கையும் அதன் பின்னரே எதிர்பார்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமை கட்டுக்குள் இருக்க இந்த காலகட்டத்தில் கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அலைகளின் போது கோவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியாவால் பெரும்பாலான இறப்புகள் ஏற்பட்டன.
அதேசமயம் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது கோவிட் வைரஸால் மோசமடைந்த பிற சுகாதார சிக்கல்களால் இறப்புக்கள் நிகழ்ந்தன என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைக்கொண்டு கோவிட்டினால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை அதானிக்க முடிவதாக
ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.