நாடளாவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மூலம் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரிக்கை
எதிர்வரும் நீண்டவார இறுதியில் 80% - 90% உடல் ரீதியான தூரத்தை பேணும் வகையில் நாடளாவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மூலம் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
தொற்றுநோயின் நிலையான கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக, ஒழுங்காக செயல்படுத்தப்பட்ட சோதனை மூலோபாயம் அவசியம்.
அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உன்னிப்பாக மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.