இலங்கையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் வெளிவரவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், அரசாங்கம் விரிவாக ஆராய்ந்து வருகிறது.
அது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் விடுபடக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், பல்வேறான மட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனோர் அங்கமாக பிரமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் இரவு முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,