கோவிட் கட்டுப்பாட்டுக்காக 9 மாகாணங்களுக்கு பிரதி சுகாதார பணிப்பாளர்கள் நியமிப்பு
கோவிட் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும் வகையில் 9 மாகாணங்களுக்கு 9 பிரதி சுகாதார பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.
இவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு சென்று கோவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தை கண்காணித்து தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அமைச்சர் இவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதிலும் இருக்கும் வைத்தியசாலைகளில் ஒரு விடுதியை கோவிட் சிகிச்சைகளுக்காக ஒதுக்கவும் சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.