கோவிட் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக மலையக ஆலயங்களிலும் விசேட வழிபாடுகள்
தீவிரமாகிவரும் கோவிட் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமத பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் மலையக ஆலயங்களிலும், பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டு தலங்களிலும் கோவிட் பிடியிலிருந்து விடுபட விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரதான இந்து மத வழிபாடு தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் ம.ஜெயகாந்த் ஆகியோரின் பங்களிப்புடன் நடத்தப்பட்டுள்ளது.
உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட் தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமானதொரு வாழ்வு மலரவும், உலக மற்றும் இலங்கை மக்களின் நன்மைக்காகவும் சர்வமத பிராத்தனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
