தீர்மானமிக்க எதிர்வரும் 10 நாட்கள் - சுய முடக்க நிலைக்கு செல்லுமாறு கோரி அறிக்கை
தீர்மானமிக்க எதிர்வரும் 10 நாட்கள் சுய முடக்க நிலைக்கு செல்லுமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் கூட்டு ஊடக அறிக்கையொன்றை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையானது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சித் தலைவர்களான ரஹூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் அமீர் அலி ஆகியோரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் வைத்திய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்தி கொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் எதிர்வரும் தீர்மானமிக்க 10 நாட்களுக்கு இதனை செயற்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்திடம் மக்களின் உயிர்களை காப்பாற்ற எவ்வித திட்டங்களோ அல்லது தேவையோ இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
