இலங்கையில் டெல்டாவின் ஆபத்தான 3 திரிபுகள் - நாட்டில் முடங்கும் பல முக்கிய நகரங்கள்
நாட்டில் டெல்டா வைரஸின் ஆபத்தான 3 வைரஸ் திரிபுகள் பரவுவதாக ஆரம்ப கட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பிரதான 3 திரிபுகளான எஸ்.ஏ 222வி, எஸ்.ஏ 701 எஸ் மற்றும் எஸ்.ஏ 1078 எஸ் எனும் ஸ்பைக் பிறழ்வை கொண்ட மாறுபட்ட டெல்டா திரிபுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கோவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் முக்கிய நகரங்களும் வரத்தக நிலையங்களும் சுயமாக மூடப்பட்டு வருகின்றன.
அந்தந்த நகரங்கள் மற்றும் வர்த்தக கட்டடங்களின் வர்த்தக சங்கங்களின் தீர்மானத்திற்கு அமையவே அவை மூடப்படுகின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening