நான்கு வாரங்களுக்காவது நாட்டை முடக்கி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை
விரைவாக பரவி வரும் கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த குறைந்தது நான்கு வாரங்களுக்காவது நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பது மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது ஆகியன சுகாதார கட்டமைப்பால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்திற்கு வந்துள்ளது.
இதனால், இப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அத்தியவசியமானது என அவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தினமும் சுமார் 3000 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் மரணங்களின் எண்ணிக்கையும் 100 அண்மித்து வருகிறது.
கடந்த 13 நாட்களில் மாத்திரம் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது.
இதனிடையே பல வைத்தியசாலைகளில் பிணவறைகளும் கோவிட் தொற்றால் மரணிக்கும் நபர்களின் சடலங்களால் நிரம்பியுள்ளதுடன் வைத்தியசாலைகளின் கோவிட் விடுதிகளிலும் நோயாளிகள் நிரம்பியுள்ளனர்.
இந்த நிலைமையில், வைத்தியசாலைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அளவுக்கும் மேல் நோயாளிகள் நிறைந்துள்ளனர்.
இதனால், நோய் தொற்றை குறைக்க துரிதமான நடவடிகைகளுக்கு செல்ல வேண்டியது அத்தியவசியமானது எனவும் சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
