யாழ். பருத்தித்துறை பகுதியில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ். பருத்தித்துறையில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 மீனவர்கள், 4 வியாபாரிகள் உட்பட 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரும், மந்திகை சந்தைப் பகுதி வர்த்தக நிலையங்களின் வெதுப்பக உரிமையாளர், பழக்கடை உரிமையாளர் உட்பட்ட வியாபாரிகள் ஐந்து பேர், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களின் பிள்ளைகள் இருவர் உட்பட்டவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருதித்தித்துறை சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தொற்றுக்கு உள்ளானவர்களின் வர்த்தக நிலையங்கள் இதுவரை தனிமைப்படுத்தப்படவோ அல்லது இயங்காது முத்திரையிடப்படவோ இல்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
