நோர்வூட் பிரதேசசபையின் மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
நோர்வூட் பிரதேசசபையின் மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரதேசசபை செயலாளர் மற்றும் 7 ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நோர்வூட் பிரதேசசபை தலைவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் தொற்று ஏற்பட முன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றமை தெரியவந்துள்ளது.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 38 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 10 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக
பொலவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam