கோவிட் நோயாளர்களை பராமரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள சிகிச்சை நிலையங்கள் அல்லது இடைநிலை மையங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான சிகிச்சையை வழங்க முடிவு செய்யப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனை தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றினால் பாதிக்கப்படும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் கடுமையான மன அழுத்தத்தினை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சுடன் இணைந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் கட்டப்பட்டு வரும் சிகிச்சை மையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கோவிட் சிகிச்சை மையங்களுக்கு அதிகமான சுகாதார ஊழியர்களைக் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இருந்து பணியாளர்களை அழைக்க குழு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்குத் தேவையான தடுப்பூசிகளின் பங்குகளை விரைவாக இறக்குமதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கோவிட் தொற்றினை அடையாளம் காண பி.சி.ஆர் சோதனைகளுக்கு இணையாக விரைவான ஆன்டிஜென் பரிசோதனையை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.