கோவிட் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் கோவிட் பெருந்தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு கடந்த காலங்களைப் போன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிமோனியா காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மட்டும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் நாட்டில் தொடர்ந்தும் கோவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்கள்
முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூரத்தை பேணுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு சுகாதார வழிகாட்டல்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் கோவிட் தொற்றாளிகள் காணப்படுவதனால் தாங்களே சுய பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று தற்பொழுது உலகில் சாதாரண ஓர் நோயாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று
காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோயாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலவிய காலப் பகுதியைப் போன்று தற்பொழுது கிராமிய மட்டத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என டொக்டர் அசேல தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam