காரைதீவு பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை
நாட்டில் ஆபத்தாக மாறியுள்ள கோவிட் -19 மூன்றாம் அலையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் காரைதீவு பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஷீர் தலைமையில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் டீ. வேல்முருகு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதோர் மீது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் .
இதன்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக கோவிட்- 19 தொற்று பரிசோதனையும்
மேற்கொள்ளப்பட்டது.