யாழில் கைதி ஒருவருக்குக் கோவிட் ! - 7 பேர் கட்டாய தனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 7 கைதிகளும் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான கைதி மானிப்பாய் - சங்குவேலியைச் சேர்ந்தவர் எனவும், இவர் கடந்த 11ஆம் திகதி செய்யப்பட்டிருந்தார் எனவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam