யாழில் கைதி ஒருவருக்குக் கோவிட் ! - 7 பேர் கட்டாய தனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 7 கைதிகளும் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான கைதி மானிப்பாய் - சங்குவேலியைச் சேர்ந்தவர் எனவும், இவர் கடந்த 11ஆம் திகதி செய்யப்பட்டிருந்தார் எனவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam