இலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் சடுதியாக உயர்வு!
நாட்டில் கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மேலும் ஐந்து கோவிட் - 19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது, இதன்படி இலங்கையில் மொத்த கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளது.
1. உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவர், கண்டி பெரியாஸ்பத்திரியில் கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர், கொதலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், இருதய மற்றும் கோவிட் - 19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் மார்ச் மாதம் 1ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நோய்த் தொற்று மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, கோவிட் - 19 நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் புற்று நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.



அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan
