நெடுங்கேணியில் கோவிட் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாகத் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இச்செயற்பாடு வவுனியா வடக்கு பிரதேச சபை பதில் கடமை செயலாளர் இ.தயாபரன் தலைமையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான நெடுங்கேணி சந்தை, பேருந்து தரிப்பிடம், வங்கிகள், வர்த்தக நிலையங்கள், வாடிகான்கள் என்பவற்றில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களின் உட்பகுதி மற்றும் நடை பாதைகள்
போன்றவற்றிற்கு வவுனியா வடக்கு பிரதேச சபையினால் தொற்று நீக்கி மருந்து
வீசப்பட்டது.