மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவருக்கு கோவிட் தொற்று உறுதி(Photos)
வவுனியா - மரக்காரம்பளை வீதியில் நேற்று காலை மூன்று மோட்டார்சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்திருந்தனர்.
இவ்விபத்தில் பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியினைச் சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இளைஞருடன் தொடர்புகளைப் பேணியவர்களில் எவருக்காவது கோவிட் தொற்றுக்கான
அறிகுறிகள் காணப்படின் உடனடியாக அப்பகுதி சுகாதார பரிசோதகரைத் தொடர்பு
கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan