வவுனியாவில் மேலும் 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் மேலும் இரு தாதியர்கள் உட்பட 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (13.05) இரவு வெளியாகின.
அதில், வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த தாதியர்கள் இருவருக்கும், மகா கச்சகொடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அஅனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், ஈரப்பெரியகுளமர பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
