வாழைச்சேனையில் மக்கள் மத்தியில் கோவிட் விழிப்பூட்டல் நடவடிக்கை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தில் பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் கோவிட் நோய் தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் இன்று குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் சித்தாண்டி இராணுவ படைப்பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன், முகக்கவசத்தினை
முறையாக அணியாத பலருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri