நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேருக்கு கோவிட் தொற்று
கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் உட்பட 32 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் இந்திக எல்லவாலா தெரிவித்துள்ளார்.
இந்த கோவிட்-19 தொற்றாளர்கள் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கெஸ்பேவ நகர சபையின் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்தில் 20 பேரும், சிறப்பங்காடி ஒன்றில் 11 பேர் என 32 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மத்திய நிலையம் என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.