வவுனியாவில் சமூகத்திலிருந்து 3 பேருக்கு கோவிட் தொற்று அடையாளம்
வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் (11.05) வெளியாகிய பரிசோதனை முடிவுகளிலிருந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலாக எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளைச் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அதில் வவுனியா ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் ஒருவருக்கும் என 3 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மூன்று பேரும் புதிதாக சமூக மட்டத்திலிருந்து இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை கோவிட் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கும், அவர்களுடன்
தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.