காலாவதியாகும் 7 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள்
எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 07 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் பாதிப்பின் போது வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.
07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள்
இவற்றுள் தற்போது இம்மாத இறுதியில் காலாவதியாகும் நிலையில் 07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பரவத்தொடங்கிய கோவிட் வைரஸ் தற்போது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள்
இதன்காரணமாக மக்கள் தற்போது எவ்வித அச்சமும் இன்றி கோவிட் கட்டுப்பாடுகளை தகர்த்துக் கொண்டிருக்கிறார்.
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை என சுகாதாரப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் கோவிட் வைரஸின் அபாயம் அதிகரிப்பு |