இலங்கையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கோவிட்-19 பரவல்
இலங்கையில் கோவிட்-19 பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட்-19 பரவல் கண்டறியப்படுகின்ற போதும் அது கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று ஒருவரிடம் இருந்து இரண்டு பேருக்குப் பரவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொழும்பு மாவட்டத்துக்கு அப்பால் கோவிட்-19 பரவல் உயர்மட்டத்தில் உள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, பதுளை, கண்டி,குருநாகல், காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, மாத்தளை மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக அதிக கோவிட்-19 பரவல் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan