இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு!
இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஆறு கோவிட் -19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. பல்லேதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியமை, சிறுநீரக நோய் போன்ற காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா மற்றும் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. வத்தள பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், மற்றும் நீரிழிவு என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. ஹூன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான கண்டி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam