இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு!
இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஆறு கோவிட் -19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. பல்லேதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியமை, சிறுநீரக நோய் போன்ற காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா மற்றும் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. வத்தள பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், மற்றும் நீரிழிவு என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. ஹூன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான கண்டி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam