இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு!
இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஆறு கோவிட் -19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. பல்லேதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியமை, சிறுநீரக நோய் போன்ற காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா மற்றும் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. வத்தள பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், மற்றும் நீரிழிவு என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. ஹூன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான கண்டி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri
