வெளிநாடொன்றில் தமிழர்கள் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப்பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்திற்காக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சந்துரு சுப்ரமணியம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனையும், பிரவினாஷ் சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில்,இதற்கு எதிராக சந்தேகநபர்கள் உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri