2 வருடங்களாக தொடரும் விசாரணை - ரவி செனவிரத்ன எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (09.07.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்திய செயலாளர்
2023 ஆம் ஆண்டு வெள்ளவத்தை மெரைன் டிரைவ் வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில், குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்காக முன்னிலையான அவரது தரப்பு சட்டத்தரணி, வீதி விபத்தைத் தடுக்கத் தவறிய முதல் குற்றச்சாட்டை தங்கள் கட்சிக்காரர் ஒப்புக்கொள்ளத் தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட கவனம் குறைவின்றி வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய மற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை தொடருமா என்பது குறித்த தீர்ப்பை வழங்குவதற்காக, இந்த வழக்கை ஆகஸ்ட் 20 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான விசாரணையை மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ரவி செனவிரத்ன தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், 2025 செப்டம்பர் மாத தொடக்கத்தில், நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒரு இடைக்காலத் தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri