அரியநேத்திரனுக்கு முன்னாள் அமைச்சர் பட்டம் சூட்டிய நீதிவான் நீதிமன்றம்!
மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் என்பருக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த தடைசெய்யும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளையினை கொக்கட்டிச்சோலை பொலிசார் அவரின் இல்லத்திற்கு கொண்டு நேரடியாக கையளித்தனர்.
ஆனால் அந்த தடை உத்தரவு பத்திரத்தில் "முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற அமைச்சர்" பாக்கியசெல்வம் அரியநேத்திரன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு, முன்னாள் அமைச்சர் என குறிப்பிட்டு நீதவான் நீதிமன்றம் கட்டளை அனுப்பி உள்ளது. இது நீதிமன்ற தவறா அல்லது பொலிசார் சமர்பிக்கும் கடிதங்களின் தவறா என்பதை மக்களே தீர்மானியுங்கள்.