யோஷித ராஜபக்ச வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷிதா ராஜபக்ச தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட சதிக்குற்றச்சாட்டுகளை மேற்கொண்டு விசாரணைக்குட்படுத்த முடியும் என கொழும்பு மேல்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, யோஷிதா ராஜபக்ச மறுசீராய்வு மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கமைய, இன்று(03.06.2026) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் குறித்த மனு விரிவாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னர், அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உத்தரவிட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அதற்கான திகதியை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, யோஷிதவின் மறுசீராய்வு மனு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மனு பரிசீலிக்கப்பட்டபோது மனுதாரர் யோஷிதா ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
உயர் நீதிமன்ற நீதிபதியொருவரை வழக்கு விசாரணையொன்றின் சாட்சியாக அழைப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கொன்றின் விசாரணை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு ஆரம்பத்தில் நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, குறித்த நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சஹன் மாபா பண்டார பிறப்பித்த ஓர் உத்தரவு குறித்து விசாரணை செய்வதற்காக, அவரை குறித்த வழக்கில் சாட்சியமளிக்க அழைப்பாணை அனுப்ப அரசாங்கத் தரப்பு முடிவு செய்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைக்கு அவிசாவளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் சஹன் மாபா பண்டாரவுக்கு, குறித்த வழக்கின் சாட்சியாக முன்னிலையாகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இடைக்கால உத்தரவு பிறக்குமாறு உத்தரவு
ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதிதா இகலஹேவா, ஃபர்மான் காசிம் ஆகியோருடன் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோர் கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்யுமாறும், நீதிபதி சஹன் மாபா பண்டாரவை வழக்கொன்றின் சாட்சியாக அழைக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஒரு நீதிபதி ஆற்றிய உத்தியோகபூர்வ கடமை குறித்து சாட்சியமளிக்க அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அது நீதித்துறையின் சுதந்திரத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட நீதிபதியை சாட்சியமளிக்க அழைப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையைச் செல்லாததாக்கவும், இந்த மனுவின் விசாரணை முடியும் வரை அந்த அழைப்பாணையின் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர்களின் வாதங்களைக் கருத்திற்கொண்டு, அவிசாவளை உயர் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையின் மீது மேலும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த மனு ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan