முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம் : கல்முனை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடையை நீக்க கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்றையதினம் (17.05.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்த்தரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோர் மீது பெரிய நீலவணை பொலிஸாரினால் தடை உத்தரவு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னிலையான சட்டத்தரணிகள்
இந்த தடை உத்தரவை நீக்க கோரி குறித்த நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான சிவரஞ்சித் மற்றும் மதிவாணன், ரிபாஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில் உறவுகளை நினைவு கூறுவது சட்டத்துக்கு முறனில்லாத வகையில் நடைபெற வேண்டும் என நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டு இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan
