கிழக்கில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Harrish Oct 03, 2023 06:10 PM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் புதிய பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கு எதிராக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் நிஷாந்த குமார செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த முல்லைத்தீவு நீதவான், பொரலுகந்த விகாரைக்கு அருகாமையில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து அக்டோபர் முதலாம் திகதி உத்தரவிட்டிருந்தார்

நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 6ஆம் மைல்கல், இலுப்பைக்குளம் பொரலுகந்த விகாரை அமைந்துள்ள காணிக்கு முன்னால் உள்ள வீதியிலும் அதனைச் சுற்றியும், நேற்று முன்தினம் (01.10.2023) அல்லது அதற்கு அண்மித்த நாளில், ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும், அதற்கு நெருக்கமான திகதியில் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா(Photos)

புதிய சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா(Photos)


திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள 8 பேரில் தமிழ் பேரவை அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் அடங்குகின்றனர். நீதிமன்ற உத்தரவில், அந்த அமைப்பு 'அடிப்படைவாத சிவில் அமைப்பு' என அழைக்கப்படுகிறது.

செப்டெம்பர் 2ஆம் திகதி மேலதிக நீதவான் தர்ஷனி அண்ணாதுரை பிறப்பித்த உத்தரவில், தமிழ் பேரவை அமைப்பு ‘அடிப்படைவாத சிவில் அமைப்பு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை | Court Bans Protest Of Tamil People In East

நிர்மாணப் பணிகள்

திருகோணமலை பொரலுகந்த விகாரை நிர்மாணப் பணிகளை மக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஆகஸ்ட் 28ஆம் திகதி திங்கட்கிழமை காலை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக திருகோணமலை கோகன்னபுர பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டதோடு, சில பௌத்த தேரர்கள், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை முற்றுகையிட்டு ஆளுநரை அச்சுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதியின்றி நிர்மாணப்பணிகளுக்கு அனுமதி வழங்க முடியாது தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை | Court Bans Protest Of Tamil People In East

அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய திம்பிரிவெவ ரஜமஹா விகாராதிபதி, வடக்கு, கிழக்கு பிரதான சங்கநாயக்கர் பொல்ஹேன்கொட உபரதன தேரர், பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு உள்ளூராட்சி சபையின் அனுமதி தேவையில்லை என கூறியுள்ளார்.

"உள்ளே நுழைய அனுமதி கொடுத்ததாகவும், ஆனால் நிர்மாணப்பணிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை எனவும் கூறினீர்கள். ஆளுநர் அவர்களே, உங்களிடமிருந்து கட்டுமான அனுமதி தேவையில்லை.

உள்ளூராட்சி மன்றச் சட்டத்தில் விகாரை கட்டுவதற்கு உள்ளூராட்சி மன்றத்தின் அனுமதியைப் பெறுமாறு குறிப்பிடப்படவில்லை. சட்டத்தை கவனமாக படியுங்கள். வணக்க ஸ்தலங்ளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு வரி விலக்கு உண்டு. வரிவிலக்கு பெற்ற பின்னர், அந்த வழிபாட்டுத் தலங்களை நாம் விரும்பியபடி அமைக்க முடியும்.

கிழக்கில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை | Court Bans Protest Of Tamil People In East

அர்ச்சகரின் விருப்பப்படி கோயில் கட்டப்படுகிறது. பிக்குகளின் விருப்பத்திற்கு அமையவே விகாரை அமைக்கப்படும்.இவை இரண்டையும் அமைக்க ஆளுநரிடம் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

அனுமதிப் பெற வரப்போவதும் இல்லை. எங்களுக்கு அனுமதி தேவையில்லை. நாங்களே விகாரையை கட்டியெழுப்புவோம்.” என தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவின் கடும் அழுத்தம்: சீன கப்பல் திட்டதில் இருந்து விலகிய இலங்கை தரப்பு

இந்தியாவின் கடும் அழுத்தம்: சீன கப்பல் திட்டதில் இருந்து விலகிய இலங்கை தரப்பு

தொடர் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகும் யாழ். சட்டத்தரணிகள் சங்கம்: வலுக்கும் நீதிபதி விவகாரம்

தொடர் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகும் யாழ். சட்டத்தரணிகள் சங்கம்: வலுக்கும் நீதிபதி விவகாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
Gallery
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US