வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 பேருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்படப் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகளிலும், டிசம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு நீதவான் வீட்டிலுமாக ஒருமாதத்தில் 4 வீடுகளின் யன்னல்களை கழற்றி உள் நுழைந்த கொள்ளைக் குழுவினர் நித்திரையில் இருந்த குடும்ப பெண்களின் கழுத்திலிருந்த சுமார் 60 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து விசேட பொலிஸ் குழுவினர் பெப்ரவரி 9ஆம் திகதி இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 பேரைக் கைது செய்துள்ளதுடன், நீதவான் வீட்டில் கொள்ளையிட்ட தாலிக்கொடி உட்பட 55.5 பவுண் தங்க ஆபரணங்கள் மீட்டதுடன் அவர்களை நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில், நேற்று(25) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 1ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை இந்த கொள்ளை குழுவின் பிரதான சூத்திரதாரி பாதாள குழுவை சேர்ந்த தெமட்டகொடை
சமந்தவின் கையாளான குணா அல்லது சத்தியா என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச்
சேர்ந்த குணசீலன் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தம்பி ஓடாவி ஆகிய
இருவரும் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
