தென்னிலங்கையில் தம்பதி கொலை - கர்ப்பிணி பெண்ணொருவர் கைது
காலி, ஊறவத்த பிரதேசத்தில் கணவன்-மனைவி கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அம்பலாங்கொட மாதம்பே பிரதேசத்தில் வைத்து விசாரணைகளுக்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த தம்பதி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணிப் பெண் கைது
தம்பதியினரின் கொலையை உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட, மாதம்பே பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்ற 47 வயதுடைய நபர் மற்றும் 50 வயதுடைய மல்லிகா ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan