தென்னிலங்கையில் தம்பதி கொலை - கர்ப்பிணி பெண்ணொருவர் கைது
காலி, ஊறவத்த பிரதேசத்தில் கணவன்-மனைவி கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அம்பலாங்கொட மாதம்பே பிரதேசத்தில் வைத்து விசாரணைகளுக்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த தம்பதி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணிப் பெண் கைது
தம்பதியினரின் கொலையை உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த பெண் அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட, மாதம்பே பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்ற 47 வயதுடைய நபர் மற்றும் 50 வயதுடைய மல்லிகா ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam