கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ். தம்பதி விமான நிலையத்தில் கைது
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான விசாக்களை பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடா செல்ல முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கணவருக்கு 40 வயது எனவும் மனைவிக்கு 34 வயது எனவும் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு 8.35 மணிக்கு ஜப்பானுக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
