நாடாளுமன்றம் சென்றால் கை விரல்களை எண்ணிப்பார்க்கும் நிலை! கபீர் ஹாசீம் கவலை
தனது வீட்டையே பார்த்துக்கொள்ள முடியாத பிரதமர் மஹிந்த ராஜபக்ச எவ்வாறு நாட்டை ஆட்சி செய்வார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் களவாடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாம் நாடாளுமன்றம் சென்றால் வெளியே வரும் போது கை விரல்களின் எண்ணிக்கையை எண்ணிப்பார்ப்போம். ஏனெனில் விரல்களைக்கூட விட்டு வைக்காதவர்கள் நாடாளுமன்றில் இருக்கின்றார்கள்.இவ்வாறான நபர்களுடன் நாம் நாடாளுமன்றில் இருக்கின்றோம் என கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.