உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை விமர்சித்துள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை துன்புறுத்துவதற்கு பயன்படுவதுடன், நாட்டின் குடிமக்களை அடிமைகளாக மாற்றும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய சட்டம் 1987ல் இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடக் கொடூரமானது.
நடைமுறை சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.
எனினும் புதிய சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்க முடியும்.
பாதிப்பில்லாத செயல்
எனவே இந்த யோசனைக்கு வாக்களிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தேசத்தையும் மக்களையும் நேசிக்காத ஒருவராகவே முத்திரை குத்தப்படுவார்.
ஒரு நாட்டில் இது போன்ற சட்டங்கள் வரும்போது பயங்கரவாதத்திற்கு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை உள்ளது.
என்ற போதும் இந்த யோசனையில் சில பாதிப்பில்லாத செயல்களும் பயங்கரவாதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
