பிள்ளைகளுக்கு உடல்ரீதியான தண்டனை : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிக்கை
பிள்ளைகளுக்கு உடல்ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவையின் (பிரிவு 19) முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்ற போதிலும், அது ஒரு கலந்துரையாடலாகவே இருந்ததாகவும், சட்டமாக நிறைவேற்றப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திருத்தம் சட்டமாக நடைமுறைக்கு வர வேண்டுமானால், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையிலும் அதற்குரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உடல்ரீதியான தண்டனை
அத்தகைய மாற்றம் இன்னும் செய்யப்படாததால், இந்தச் சட்டமூலம் நிலுவையிலேயே உள்ளது.

நாடாளுமன்றத்தின் குழுநிலை விவாதத்தின் போது இந்தச் சட்டமூலத்தில் மாற்றங்களைக் கொண்டு வர இன்னும் வாய்ப்புள்ளதாகவும், திருத்தங்களை முன்மொழிய முடியும் எனவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
எனவே, உடல்ரீதியான தண்டனை தொடர்பான திருத்தம் விவாத கட்டத்திலேயே உள்ளதாகவும், அது இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை எனவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 20 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம் News Lankasri