தந்தையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்
கேகாலை நூரியா பொலிஸ் பிரிவின் நூரியவத்த 02 பிரிவில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று இரவு நூரியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அதற்கமைய, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், வீட்டின் அருகே சிறுவன் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவன்
சிறுவன் உடனடியாக நூரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய, இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பிரேத பரிசோதனைக்காக உடல் அவிசாவலை வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam