கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடு
ஒஸ்ரியா கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது. கோவிட் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றிய பின்னர், ஒஸ்ரிய நாட்டின் அனைத்து பிரஜைகளும் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஒஸ்ரியாவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த சட்டத்திற்கு அமைய கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மறுக்கும் நபருக்கு 670 அமெரிக்க டொலர்கள் முதல் 4 ஆயிரம் டொலர் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
சில நாடுகள் ஏற்கனவே முதியவர்கள் அல்லது சுகாதார ஊழியர்கள் கோவிட் தடுப்பூயை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளன. எனினும் எந்த ஐரோப்பிய நாடும் தமது நாட்டுக்கு குடிமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வரவில்லை.
சில தரப்பினர் தடுப்பூசி கட்டாயம் என்ற தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்திருந்த பின்னணியிலேயே ஒஸ்ரியா அந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
அத்துடன் ஒஸ்ரிய குடிமக்களின் 72 வீதமாகவர்களுக்கு முழுமையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையிலும் கோவிட் தடுப்பு நடவடிக்கைக்காக ஒஸ்ரியா இவ்வாறான கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடாக ஒஸ்ரியா மாறியுள்ளது.