தென்னிலங்கையில் உறக்கத்திலேயே உயிரிழந்த தந்தைக்கு கோவிட் தொற்று உறுதி
காலியில் உறக்கத்தில் உயிரிழந்த 3 பிள்ளைகளின் தந்தைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் சந்திரசேன லொக்குகே தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா நிலைமை மரணத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 71 வயதுடைய அஹங்கம, மிகஹகொட பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின தந்தை என தெரியவந்துள்ளது.
இந்த நபர் இரவு உறங்கியுள்ள நிலையில் அதிகாலை 5.30 மணியளவில் மனைவி தேனீர் கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக மனைவி 1919 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தியுள்ளார். அம்பியுலன்ஸ் ஊடாக சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.