இலங்கையில் நாளாந்தம் பாரிய அச்சுறுத்தலாக மாறிவரும் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு
நாட்டில் கோவிட் தொற்றால் இன்றைய தினம் இதுவரையில் 3,793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக 1,073 பேர் இன்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதனை தொடர்ந்து மேலும் 2,720 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 373,152 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,186 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam